Friday, November 11, 2011

திக்கு தெரியாத ரோட்டில்

ஆள் அரவமில்லாத சாலை...

மின்சார பற்றாக்குறையாம்...

கண் தெரியவில்லை மை இருட்டில்...

எங்கோ ஓர் தெரு நாய் ஊளையிடும் சப்தம்...

பர்ஸ்ல வேற பணம் இருக்கே...

மனைவியோட நகைய வேற லாக்கர்ல இருந்து எடுத்துட்டு வர்றேனே...

யாராவது வந்து அடிச்சிட்டு போயிட்டா என்ன பண்றது...

கைலதான் கத்தி இருக்கே...பார்த்துக்கலாம்...

என்ன சத்தம் பின்னால்...

யாரோ வர்றாங்களே...

இருட்டுல தெரியலயே...

காலடி சத்தம் வேகமா கேட்குதே...

ஐயையோ!!!

என்னதிது???

இவ்ளோ பெரிய நிழலுருவம்...

திரும்பி திரும்பி பார்த்துகிட்டே வேகமா போறேன்...

ஓடி வர்ற மாதிரி தெரியுதே...

நாமளும் ஓடலாம்...

ஏதாவது ஒளியுறதுக்கு இடம் கிடைக்குமா...

அச்சச்சோ!!!

முட்டு சந்து...

என்ன பண்ணுறது இப்போ?...

தப்பிக்க ஏதாச்சும் வழி கண்டு பிடிக்கணுமே...

தட்...தட்...தட்...தட்...

அருகில் வந்தது உருவம்...

அடுத்து...

...

...

...

...

...

அதற்கு மேல் இல்லை...

பொட்டலம் மடித்த கிழிந்த பேப்பரில்...
;)








4 comments: